பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 53 : சுற்றந்தழால்
குறள் 521:
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
சுற்றத்தார் கண்ணே உள.
விளக்கம்:
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த
உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
குறள் 522:
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
ஆக்கம் பலவும் தரும்.
விளக்கம்:
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது
மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.
குறள் 523:
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
கோடின்றி நீர்நிறைந் தற்று.
விளக்கம்:
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய
வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
குறள் 524:
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
பெற்றத்தால் பெற்ற பயன்.
விளக்கம்:
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்றுஅதை
முடிக்குமாறு காத்த போதிலும் குறையாகிவிடும்.
குறள் 525:
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
சுற்றத்தால் சுற்றப் படும்.
விளக்கம்:
பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும்
செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.
குறள் 526:
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.
மருங்குடையார் மாநிலத்து இல்.
விளக்கம்:
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால்
அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.
குறள் 527:
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
அன்னநீ ரார்க்கே உள.
விளக்கம்:
காக்கை தனக்கு கிடைத்ததை மறைத்து வைக்காமல் சுற்றத்தைக்
கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.
குறள் 528:
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
அதுநோக்கி வாழ்வார் பலர்.
விளக்கம்:
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர்
சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
குறள் 529:
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
காரணம் இன்றி வரும்.
விளக்கம்:
முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால்
பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே
வந்து சேரும்.
குறள் 530:
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
விளக்கம்:
தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித்
திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள
வேண்டும்.
No comments:
Post a Comment