அதிகாரம் 2 : வான்சிறப்பு
குறள் 11:
வான்நின்று
உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
விளக்கம்:
மழை பெய்ய
உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது
உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
குறள் 12:
துப்பார்க்குத்
துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
துப்பாய தூஉம் மழை.
விளக்கம்:
உண்பவர்க்குத்
தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
குறள் 13:
விண்இன்று
பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
உள்நின்று உடற்றும் பசி.
விளக்கம்:
மழை பெய்யாமல்
பொய்படுமானால், கடல் சூழ்ந்த
அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
குறள் 14:
ஏரின் உழாஅர்
உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
வாரி வளங்குன்றிக் கால்.
விளக்கம்:
மழை என்னும்
வருவாய் வளம் குன்றி விட்டால், உணவுப் பொருள்களை உண்டாக்கும் உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
குறள் 15:
கெடுப்பதூஉம்
கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
விளக்கம்:
பெய்யாமல்
வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல்
வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
குறள் 16:
விசும்பின்
துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
பசும்புல் தலைகாண்பு அரிது.
விளக்கம்:
வானத்திலிருந்து
மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில்
ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.
குறள் 17:
நெடுங்கடலும்
தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
தான்நல்கா தாகி விடின்.
விளக்கம்:
மேகம்
கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
குறள் 18:
சிறப்பொடு
பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
விளக்கம்:
மழை பெய்யாமல்
போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
குறள் 19:
தானம்
தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
வானம் வழங்கா தெனின்.
விளக்கம்:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு
செய்யும் தானமும், தம் பொருட்டு
செய்யும் தவமும் இல்லையாகும்.
குறள் 20:
நீர்இன்று
அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
வான்இன்று அமையாது ஒழுக்கு.
விளக்கம்:
எப்படிப்பட்டவர்க்கும்
நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
No comments:
Post a Comment